தமிழ்நாடு

முறை தவறி காதலித்த சித்தப்பா...தூக்கில் தொங்கிய அண்ணன் மகள் - நெல்லையில் பயங்கரம்

தந்தி டிவி

அண்ணன் மகளை முறைதவறி காதலித்து.... இளைஞர் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், திருமணமான ஒரு வருடத்திலே தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவை சேர்ந்தவர் பிரபாகர். இவரது தந்தைக்கு இரு தாரங்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், முதல் தாரத்திற்கு பிறந்த அண்ணன் மகளை பிரபாகர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இளைஞரின் முறை தவறிய காதலை, இரு வீட்டாரும் எதிர்த்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் திசையன்விளையில் தனியே வசித்து வந்த நிலையில், பிரபாகர் வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுபோதைக்கு அடிமையானதால் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், 18 வயது இளம் பெண்ணான பிரபாகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மனைவி இறந்த விரக்தியில் இருந்த பிரபாகர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபாகரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை