நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே கோயில் திருவிழாவிற்கு ராட்டினம் கொண்டு வந்த குழுவில் இருந்த சிறுமி கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சுற்றுவட்டார போலீசார் உஷார் படுத்தப்பட்டு, கங்கைகொண்டான் காவல் சோதனைச் சாவடியில் சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை அழைத்து சென்ற சிறுமியின் தாய் மாமனான சுரேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமியை அழைத்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.