தமிழ்நாடு

உயிரிழந்த பெண் யானை, கட்டியணைத்து கதறிய பாகன்..!

நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் 21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 85 வயதான யானை சுந்தரி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கடந்த மாதம் 14-ஆம் தேதி யானைக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, பராமரிக்க முடியாததால் யானையை அரசே பராமரிக்க வேண்டும் என பாகன் அசன்மைதீன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து யானையை ராஜபாளையத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி பராமரிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், யானை நேற்று மாலை உயிரிழந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாகன் அசன் மைதீன், யானையை கட்டி அணைத்து அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’