தமிழ்நாடு

குடிநீர் பைப்லைன் அமைக்க எதிர்ப்பு.. போராட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி - நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

அலவந்தான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிக்கோட்டை, திருத்து உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுவான கிணறு ஒன்று அமைக்கப்பட்டு அதில் இருந்து தனித்தனியாக பைப் லைன் ஏற்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அலவந்தான்குளம் கிராமத்தில் மக்கள் தொகை அதிகரித்ததால் கூடுதலாக குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தங்கள் கிராமத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறி பள்ளிக்கோட்டை மற்றும் திருத்து ஆகிய கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்தின் போது மயங்கி விழுந்த மூதாட்டியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்