"லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரருக்கு ரூ.20 கோடி சொத்து" நெல்லை மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணபாபுவுடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமாரின் சொத்து விவரங்கள் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி தூத்துக்குடி பகுதியில் தீயணைப்பு வீரரான செந்தில்குமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 11 சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இவரது வங்கி கணக்குகளில் 70 லட்சம் ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதும், பல முன்னணி நிறுவனங்கள் தீயணைப்பு சான்றிதழுக்காக நேரடியாக லஞ்சப் பணத்தை அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 500 சதவீதம் செந்தில்குமார் சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.