தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு : மாணவனின் தந்தையின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவனின் தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், மாணவனின் தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வெங்கடேசனின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்