தமிழ்நாடு

நீட் இல்லாதபோது, எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவில்-வடசேரி பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மாணவர்கள், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், செல்வாக்கு படைத்த குடும்பங்களை சேர்ந்தவர்களே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு வைத்த பிறகு மோசடிகள் வெளிவருவதாக கூறிய அவர், நீட் தேர்வு இல்லாத காலத்தில் எவ்வளவு மோசடிகள் நடத்திருக்கும் என்றார். இந்த அனுபவங்களை கொண்டு, நீட் தேர்வு நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை