தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவரின் தந்தை ஜாமின் மனு தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தை டேவிஸின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

தந்தி டிவி
தமிழகத்தை அதிர வைத்த நீட் ஆள்மாறாட்ட புகார் வழக்கில் சென்னையை சேர்ந்த மற்றொரு மாணவரின் தந்தை டேவிஸ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு நீதிபதி பார்த்திபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, அக்டோபர் 30ஆம் தேதி டேவிஸின் ஜாமின் மனு தள்ளுபடி செய்த நிலையில், சில தினங்களிலேயே மீண்டும் மனு தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி பார்த்திபன், டேவிஸின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு