தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பம் - வடமாநில இளைஞர்களின் புகைப்படம் வெளியீடு

தமிழக மாணவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்களின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

தந்தி டிவி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னை மாணவர் சிக்கினார். சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் நீட் தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு முறைகேடு நடந்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து, மூன்று மாணவர்கள், ஒரு மாணவி கைதாகினர். இந்த நிலையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வடமாநிலங்களை சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 94438-84395 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இவர்கள் தமிழக மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை