தமிழ்நாடு

"நீட்" ஆள் மாறாட்டம் : மேலும் ஒரு மாணவி கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்

தந்தி டிவி

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அவரது தாயாரையும் சென்னைக்கு வந்து கைது செய்த சிபிசிஐடி போலீசார் இருவரையும் தேனிக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர் இருவரும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நடுவர் பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு