அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து நெசவுதொழிலாளியின் மகள் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த நெசவுதொழிலாளி முரளியின் மகள் காயத்ரிதேவி இது குறித்து பேசும் போது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் படிப்பில் தன்னால் சாதிக்க முடிந்ததாக கூறினார்.