தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடு வழக்கு - ஜாமீன் கோரி இடைத்தரகர் ரஷீத் மனு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான இடைத்தரகர் ரஷீத்- இன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தந்தி டிவி

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான இடைத்தரகர்

ரஷீத்- இன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.நீட் தேர்வுகளில் முறைகேடு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக, கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ரஷீத் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி

அவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேலும் சில வழக்குகளையும் இத்துடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்