தமிழ்நாடு

நீட் மரண இழப்பீடு - உயர்நீதிமன்றம் அதிருப்தி

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் அமர்வில் முறையிட்டார். அப்போது, நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாதலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாகவும், தற்கொலைகளை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதை கேட்ட நீதிபதிகள், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக தெரிவித்தனர். மாணவர்கள் தற்கொலைகளை அரசியல்வாதிகள் பெரிதுபடுத்தக் கூடாது எனவும், அப்போது தான் தற்கொலைகள் குறையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு