தமிழ்நாடு

நீட் பயிற்சி பெற 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு

தமிழக அரசு வழங்கும் நீட் பயிற்சிக்கு, 15 ஆயிரம் மாணவர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க அரசு தயாராகி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து இதுவரை 14 ஆயிரத்து 975 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்து 380 மாணவர்களும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 70 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 680 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், இறுதியாக 6 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதில் ஆயிரத்து 615 பேர் தேர்ச்சி பெற்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலுக்கு வருவதால் இந்த ஆண்டு 300 பேர் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர் .அடுத்த ஆண்டு 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கலந்தாய்வில் இடம்பெறுவதால் , அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க கூடிய இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்