Neet Exam | Certificateஐ மறந்துவிட்டு வந்த நீட் தேர்வர் - மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நீட் முதுநிலை தேர்வு நடைபெற்ற நிலையில், சான்றிதழை மறந்து வந்த தேர்வருக்கு காவலர்கள் உதவியுள்ளனர். தேர்வர் ஒருவரின் தந்தை கடையில் பெற்ற சான்றிதழை, சிறப்பு உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்கு கொண்டு சென்று வழங்கினார். மேலும், கடைசி நேரத்தில் வந்த தேர்வரையும் அழைத்துச்சென்ற காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டு குவிந்தது.