தமிழ்நாடு

தேசிய அளவில் நடைபெற்ற தடை தாண்டும் போட்டி.. பதக்கத்தை தட்டி சென்ற மாணவி..

தந்தி டிவி

தேசிய அளவில் நடைபெற்ற தடை தாண்டும் போட்டியில், திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சோளிர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் விமலா தம்பதியின் மகள் மெகிடா எபிபனி. அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வரும் இந்த மாணவி, கடந்த மாதம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில், தடை தாண்டும் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, சாதனை படைத்த மாணவியை கவுரவிக்கும் விதமாக, பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்