தமிழ்நாடு

சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு : நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

விருதுநகர் முதல் நெல்லை வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை திட்டஇயக்குனர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தென்காசியை சேர்ந்த துரைராஜ் என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலை அமைக்க வேண்டும் என்ற விதியை மீறி, விருதுநகர் முதல் நெல்லை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில்10 ஆண்டுகளாக புதிய சாலை போடாமல் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இதனால், இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் மற்றும் நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் உள்ளிட்டோர் இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்