தமிழ்நாடு

சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு : நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

விருதுநகர் முதல் நெல்லை வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை திட்டஇயக்குனர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தென்காசியை சேர்ந்த துரைராஜ் என்பவர் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலை அமைக்க வேண்டும் என்ற விதியை மீறி, விருதுநகர் முதல் நெல்லை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில்10 ஆண்டுகளாக புதிய சாலை போடாமல் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இதனால், இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் மற்றும் நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் உள்ளிட்டோர் இது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை