மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலக்கிய தமிழக வீரர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் சார்பாக பங்கேற்க வீரர்கள் 28 பதக்கங்கள் வென்று அசத்தினர். இந்நிலையில் ஊர் திரும்பிய வீரர்களை நண்பர்கள், பயிற்சியாளர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.