தமிழ்நாடு

நாசவேலைக்கு திட்டமிட்ட 7 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் : தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில், 7 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து, புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து டெல்லிக்கு நாடுகடத்தப்பட்ட 14 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்துவதற்காக, சிறையில் உள்ள 7 நபர்களை காவலில் எடுக்க முடிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி, ஏழு பேரையும், 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்