தமிழ்நாடு

நாசவேலைக்கு திட்டமிட்ட 7 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் : தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில், 7 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து, புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து டெல்லிக்கு நாடுகடத்தப்பட்ட 14 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்துவதற்காக, சிறையில் உள்ள 7 நபர்களை காவலில் எடுக்க முடிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி, ஏழு பேரையும், 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா