தமிழ்நாடு

வளைச்சி போட நினைத்த நபர் - ``கைய வச்ச நடக்குறதே வேற'' அலறவிட்ட நரிக்குறவர் பெண்கள்..பரபரப்பு காட்சி

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நரிக்குறவர்கள் வழிபட்டு வந்த கோயிலை தனிநபர் அகற்ற முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்புக்கு அருகேவுள்ள அரசு புறம்போக்கு இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் உரிமைகோரி வருவதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓம் சக்தி படத்தை வைத்து வழிபாடு நடத்தியதுடன் கோவில் கட்ட கற்களை வைத்துள்ளனர். அந்த கற்களை குமார் தரப்பினர் வீசியதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய்த்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் கோட்டாசியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை