தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் மனு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் இணைந்து, தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் இணைந்து, தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, அதிமுக மீது களக்காடு, திருநெல்வேலி தாலுகா நிலையத்தில், புகார் இருப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், காங்கிரஸ் மீது, மூலக்கரைபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த 28 லட்சத்தை தாண்டி அதிமுகவினர் 59 லட்சமும், காங்கிரஸ் 34 லட்சமும், ஹரிநாடார் 32 லட்சமும் செலவு செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்