தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் மனு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் இணைந்து, தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் இணைந்து, தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, அதிமுக மீது களக்காடு, திருநெல்வேலி தாலுகா நிலையத்தில், புகார் இருப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், காங்கிரஸ் மீது, மூலக்கரைபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த 28 லட்சத்தை தாண்டி அதிமுகவினர் 59 லட்சமும், காங்கிரஸ் 34 லட்சமும், ஹரிநாடார் 32 லட்சமும் செலவு செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு