தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி

நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தந்தி டிவி

நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 21 ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், எண்ணும் பணி, காலை 8 மணிக்கு துவங்கியது. 22 சுற்றுகள் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ரெட்டியார்பட்டி நாராயணன் 94 ஆயிரத்து 484 வாக்குகள் பெற்றார். ரூபி மனோகரனுக்கு 62 ஆயிரத்து 172 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 2 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்றார். எனவே, 32 ஆயிரத்து 312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்று, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாங்குநேரி தொகுதியை கைப்பற்றியது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு