தமிழ்நாடு

2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியில் 2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியை சேர்ந்த சண்முகம், நந்தினிதேவி தம்பதியினருக்கு 2 குழந்தைகள். கடந்த 45 நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக, அவர்களின் 5 மாத குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு 2 வயது மகள் ஷன்மிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில், இன்று 2 வயது குழந்தை ஷன்மிதா ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தாள். கடந்த 2 மாதத்தில் ஒரேவீட்டில் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை