தமிழ்நாடு

2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியில் 2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியை சேர்ந்த சண்முகம், நந்தினிதேவி தம்பதியினருக்கு 2 குழந்தைகள். கடந்த 45 நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக, அவர்களின் 5 மாத குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு 2 வயது மகள் ஷன்மிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில், இன்று 2 வயது குழந்தை ஷன்மிதா ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தாள். கடந்த 2 மாதத்தில் ஒரேவீட்டில் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை