தமிழ்நாடு

2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியில் 2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலி.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சின்னகாகாவேரி பகுதியை சேர்ந்த சண்முகம், நந்தினிதேவி தம்பதியினருக்கு 2 குழந்தைகள். கடந்த 45 நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக, அவர்களின் 5 மாத குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு 2 வயது மகள் ஷன்மிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில், இன்று 2 வயது குழந்தை ஷன்மிதா ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தாள். கடந்த 2 மாதத்தில் ஒரேவீட்டில் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்