Namakkal Temple | 200 கிலோ அன்னத்தால் ஜொலித்த மாரியம்மன் | தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள் #namakkal #temple #mariamman #thanthitv 200 கிலோ அன்னத்தால் மாரியம்மன் அலங்காரம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து 200 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.