தமிழ்நாடு

நாமக்கல் : வாட்டர் பாட்டிலில் பூச்சி மருந்து வாசனை - பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள், வகுப்பறையில் உள்ள வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடித்துள்ளனர். அப்போது பூச்சிக்கொல்லி மருந்து வாசனையை உணர்ந்த மாணவிகள், அது குறித்து ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் கூறி உள்ளனர். அப்போது இதை பெற்றோரிடம் கூற வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. எனினும், மாணவிகள் அது குறித்து பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் முறையிட்டுள்ளனர் மேலும் பரமத்தி வேலூர் மோகனூர் பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்