தமிழ்நாடு

தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது.

தந்தி டிவி

சேலம் முதல் கரூர் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுத்திருந்தனர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் வழங்கப்படாததால் ராசிபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரயில்வே அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராசிபுரம் தாசில்தார் அலுலவலகத்தில் உள்ள பொருட்களை நீதிமன்ற ஊழியர் ஜப்தி செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்