காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எலந்தகுட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஒரு வாரமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தால் ஈரோடு-சங்ககிரி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீர் பிரச்சினையால் குழந்தைகள் பொதுத்தேர்வைக் கூட எழுத முடியவில்லை எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டிராக்டர் மற்றும் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.