தமிழ்நாடு

பொங்கலை நாய் சாப்பிட்டதால் 100வருடமாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தந்தி டிவி

நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கிலிப்பட்டி என்ற இந்த அழகிய கிராமம். பொங்கல் பண்டிகையால் தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக இந்த கிராமம் மட்டும் எவ்வித ஆரவாரமும் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது. இங்கு 3 தலைமுறைகளாக யாரும் பொங்கல் கொண்டாடுவதில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர், பொங்கல் பண்டிகையின் போது படைக்கப்பட்ட உணவை நாய் ஒன்று சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதி, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையே தாங்கள் நிறுத்தி விட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால், இது மூட நம்பிக்கை என 80 வயது ஒய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோ கூறுகிறார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஆண்டு பொங்கலின் போது கிராமத்தில் இருந்த பசு மாடுகள் உயிரிழந்தன. எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றதால், பொங்கல் கொண்டாடு வதையே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் முற்றிலும் தவிர்த்து விட்டனர்.

இதுதவிர, சிங்கிலிப்பட்டி கிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்ற பெண்களும், வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு, திருமணம் ஆகி வந்துள்ள பெண்களும் கூட, பொங்கல் கொண்டாடுவதில்லை. 21 ம் நூற்றாண்டிலும் இப்படியொரு அதிசய கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்