தமிழ்நாடு

நாமக்கலில் கார் திருடுபோன வழக்கு : காரை திருடியவன் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அரசு மருத்துவர் கனிமொழி என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திருடுபோனது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அரசு மருத்துவர் கனிமொழி என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் திருடுபோனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பரமத்திவேலூரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரை வேகமாக ஓட்டி வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த கோபிநாத் என்பதும், அரசு மருத்துவரின் காரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவரின் காரை பறிமுதல் செய்த போலீசார், அவனை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்