தமிழ்நாடு

இளம் பெண்ணை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற காவல் ஆய்வாளர் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ

நாகர்கோவிலில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, காவல் ஆய்வாளர் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

வடசேரி காவல்நிலை ஆய்வாளர் சேவியர் பெர்னாண்டஸ் வாகன தணிக்கையின் போது, தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, தேவையின்றி வெளியே வரக்கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் காவல் ஆய்வாளருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ஆய்வாளர், இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, தாக்க முயன்றார். அந்த பெண்ணின் தாயார், தனது மகளை ஆய்வாளரின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்