வெளுத்து வாங்கிய திடீர் கனமழை... 2 மாவட்டங்களை மொத்தமாக புரட்டி போட்ட வானிலை நாகை மற்றும் காரைக்காலில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உள்பட நாகை மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், அதனையொட்டி உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. காரைக்கால், திருநள்ளாறு, சேத்தூர், நெடுங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காரைக்காலில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.