தமிழ்நாடு

ரூ.500 கள்ளநோட்டு மாற்றிய பெண் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிய பெண்மணியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிய பெண்மணியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்ணன் என்பவரது கடைக்கு, வந்த பெண்மணி ஒருவர் 40 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் கொடுத்து மீதி தொகையை பெற்றுச் சென்றுள்ளார். அதன்பின்னர், அப்பெண்மணி கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடைக்கு வந்த அதே பெண்மணி 80 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு கடை உரிமையாளர் கண்ணணிடம் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்டு கடை ஊழியர்கள் அப்பெண்மணியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். கள்ள நோட்டுகளை வழங்கிய அந்த பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..