தமிழ்நாடு

ரூ.500 கள்ளநோட்டு மாற்றிய பெண் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிய பெண்மணியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றிய பெண்மணியை வியாபாரிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்ணன் என்பவரது கடைக்கு, வந்த பெண்மணி ஒருவர் 40 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் கொடுத்து மீதி தொகையை பெற்றுச் சென்றுள்ளார். அதன்பின்னர், அப்பெண்மணி கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இந்நிலையில் கடைக்கு வந்த அதே பெண்மணி 80 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு கடை உரிமையாளர் கண்ணணிடம் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்டு கடை ஊழியர்கள் அப்பெண்மணியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். கள்ள நோட்டுகளை வழங்கிய அந்த பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"