தமிழ்நாடு

அரசு சேமிப்பு கிடங்கில் ரூ.2 லட்சம் மதிப்புடைய சாராயம் பறிமுதல்

நாகையில் அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

நாகையில் அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். காரைக்காலில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் சாராயம், நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேமிப்பு கிடங்கில் அதிரடியாக நுழைந்த போலீசார், 30 சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அப்போது சாராய மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றி தப்ப முயன்ற தங்கபாண்டி என்பவரை குண்டாஸ் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்