தமிழ்நாடு

அரசு சேமிப்பு கிடங்கில் ரூ.2 லட்சம் மதிப்புடைய சாராயம் பறிமுதல்

நாகையில் அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

நாகையில் அரசு சேமிப்பு கிடங்கில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். காரைக்காலில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் சாராயம், நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேமிப்பு கிடங்கில் அதிரடியாக நுழைந்த போலீசார், 30 சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அப்போது சாராய மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றி தப்ப முயன்ற தங்கபாண்டி என்பவரை குண்டாஸ் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்