தமிழ்நாடு

தூர்வாரப்படாத பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் : தரைதட்டி கவிழ்ந்த விசைப்படகு முற்றிலும் சேதம்

சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

தந்தி டிவி
சீர்காழியை அடுத்த பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடித்து விட்டு திரும்பிய சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு முகத்துவாரத்தில் தரைதட்டி கவிழ்ந்தது. இதையடுத்து சாமிநாதன் உள்ளிட்ட 4 மீனவர்கள் படகில் இருந்து கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து பழையாறு மீனவர்கள் 6 விசை படகுகளில் விரைந்து சென்று சாமிநாதன் படகை கயிறு கட்டி 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்டு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான விசை படகு முற்றிலும் சேதமடைந்தது. எனவே பழையாறு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரவும் பாதிக்கபட்ட படகை சீரமைக்க நிவாரணம் வழங்கவும் அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி