தமிழ்நாடு

நாகையில் 2-ம் ஆண்டு நெய்தல் கோடை விழா துவக்கம்

நாகப்பட்டினத்தில் இரண்டாம் ஆண்டு நெய்தல் கோடை விழா வெகு விமரிசையாக நேற்று துவங்கியது.

தந்தி டிவி

நாகப்பட்டினத்தில் இரண்டாம் ஆண்டு நெய்தல் கோடை விழா வெகு விமரிசையாக நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவினை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். தென்னக கலை பண்பாட்டுத் துறை சார்பில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன. இதில் பிரபல நாட்டிய தாரகை, பத்மா சுப்ரமணியன் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. கோடைவிழா நடைபெறும் நாகை கடற்கரையில் மணல் சிற்பம் மற்றும் மலர் கண்காட்சி உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து சென்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை