தமிழ்நாடு

நாகையில் 2-ம் ஆண்டு நெய்தல் கோடை விழா துவக்கம்

நாகப்பட்டினத்தில் இரண்டாம் ஆண்டு நெய்தல் கோடை விழா வெகு விமரிசையாக நேற்று துவங்கியது.

தந்தி டிவி

நாகப்பட்டினத்தில் இரண்டாம் ஆண்டு நெய்தல் கோடை விழா வெகு விமரிசையாக நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவினை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். தென்னக கலை பண்பாட்டுத் துறை சார்பில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன. இதில் பிரபல நாட்டிய தாரகை, பத்மா சுப்ரமணியன் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. கோடைவிழா நடைபெறும் நாகை கடற்கரையில் மணல் சிற்பம் மற்றும் மலர் கண்காட்சி உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்