தமிழ்நாடு

ஏரியில் மண் அள்ளியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு...

விழுப்புரம் அருகே ஏரியில் மண் அள்ளிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் உள்ள வீரமூர் ஏரியில் மண் அள்ளுவதற்காக கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், பிரகாஷ், ஏழுமலை மற்றும் சுப்ரமணி ஆகியோர் மாட்டு வண்டிகளில் சென்றுள்ளனர். அப்போது அங்கே காரில் வந்த மர்மநபர்கள் அவர்கள் 5 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகே இருந்த கரும்பு காட்டுக்குள் நுழைந்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு மாட்டின் நாக்கு துண்டான நிலையில் மற்ற மாடுகள் காயம் அடைந்தன. இதனையடுத்து துப்பாக்கியால் சுட்டவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் பொதுமக்கள் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலை மறியல் நடத்தியவர்களிடம் செஞ்சி காவல்துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ