தமிழ்நாடு

செல்போன் கடையில் துளையிட்டு கொள்ளை : போலீசார் விசாரணை..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செல்போன் கடையில் துளையிட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்படும் ஜமாலுதீன் என்பவரது செல்போன் கடையின் கிரில் கதவை மர்ம நபர்கள் துளையிட்டனர். அப்போது உயர்தர செல்போன்கள் மற்றும் ரொக்கம் ஒன்றரை லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து கோபி காவல்துறையினர் சிசிடிவி படக்காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்