தமிழ்நாடு

மயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்?

சென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி சிவக்குமார் அடையாளம் தெரியாத 8 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது சித்தி மகள் லட்சுமியின் பிறந்தநாளை கொண்டாட சிவகுமார் சென்றிருந்த போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தாதாவான சிவகுமாருக்கும், கொலை செய்யப்பட்ட சிவகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரவுடி சிவக்குமார் கொலை தொடர்பாக அவருடைய சித்தி மகள் லட்சுமி உட்பட 3 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்