#husbandwifefight #husbandwife குடும்ப தகராறில் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். மேல்பள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது மனைவி மோனிஷாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இரவு மதுபோதையில் வந்த கணவனுடன் ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த மோனிஷா அவர் தூங்கும்போது கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்ட மோனிஷாவிடம், வேறு யாருக்காவது இதில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது...