தமிழ்நாடு

சென்னைவாசிகள் ரசிச்சி ருசிச்சி குடிக்கிற மட்டன் சூப்பின் திகில் பின்னணி..பீதியாக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட்டில் இருக்கும் ஆட்டிறைச்சி கடைகள் மற்றும் குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, குடோனில் பாதுகாப்பற்ற முறைகளில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால் மற்றும் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இங்கிருந்து சென்னையில் முக்கிய நட்சத்திர ஹோட்டல் மற்றும் சிறிய கடைகளுக்கு ஆட்டுக்கால் சப்ளை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 நாட்களுக்கு முன்பாக ஒன்றரை டன் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதில் எங்கெல்லாம் இறைச்சி சப்ளை செய்யப்படுகிறது என்பதை விசாரித்து, சைதாப்பேட்டை மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனையை நடத்தியதும் தெரியவந்துள்ளது. கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?