தமிழ்நாடு

நாளை முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா : பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தந்தி டிவி
முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், நாளை 112-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதோடு, நாளை மறுநாள் அவரது 57-வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 80 கேமரா பொருத்தப்பட்டும், 18 சோதனை சாவடி அமைக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர, ஆளில்லா உளவு விமானம் மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை