தமிழ்நாடு

நாளை முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா : பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தந்தி டிவி
முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், நாளை 112-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதோடு, நாளை மறுநாள் அவரது 57-வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 80 கேமரா பொருத்தப்பட்டும், 18 சோதனை சாவடி அமைக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர, ஆளில்லா உளவு விமானம் மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..