தமிழ்நாடு

முருகன், நளினியின் பரோல் விவகாரம்: விண்ணப்பித்தால் அரசு விடுவிக்கும் - அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் பரோலில் விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தால் தமிழக அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கும் முயற்சியையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்