தமிழ்நாடு

முருகன், நளினியின் பரோல் விவகாரம்: விண்ணப்பித்தால் அரசு விடுவிக்கும் - அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் பரோலில் விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தால் தமிழக அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கும் முயற்சியையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை