தமிழ்நாடு

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

மங்களூருவில் இருவரும் கைது - சிறையில் அடைப்பு

தந்தி டிவி

கடந்த மாதம் 18-ஆம் தேதி, கொடைக்கானல் மலைச்சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில், மங்களூருவைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து தேவதானப்பட்டி தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், கொலையான முகமது சமீரின் மனைவி ஃபர்தோஷ் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் முகமது யாசிப் ஆகியோரை மங்களூருவில், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சமீருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொடைக்கானல் சாலையில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை