தமிழ்நாடு

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

மங்களூருவில் இருவரும் கைது - சிறையில் அடைப்பு

தந்தி டிவி

கடந்த மாதம் 18-ஆம் தேதி, கொடைக்கானல் மலைச்சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில், மங்களூருவைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து தேவதானப்பட்டி தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், கொலையான முகமது சமீரின் மனைவி ஃபர்தோஷ் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் முகமது யாசிப் ஆகியோரை மங்களூருவில், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சமீருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொடைக்கானல் சாலையில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ