தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - குல்சன் ராஜ்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார்.

தந்தி டிவி

கேரளாவில் தென் மேற்கு பருவமழை நாளை மறுநாள் துவங்க உள்ள நிலையில் மூவர் குழுவினர் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்பு, குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மூவர் குழு தலைவர் குல்சன் ராஜ், அணையின் கசிவு நீர் இயல்பான நிலையிலேயே உள்ளதாகவும், 13 மதகுப்பகுதிகளும் நல்ல நிலையிலே உள்ளதாகவும் தெரிவித்தார். பேபி அணையை பலப்படுத்துவது குறித்து இருமாநில அரசுகளும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?