தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது - குல்சன் ராஜ்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார்.

தந்தி டிவி

கேரளாவில் தென் மேற்கு பருவமழை நாளை மறுநாள் துவங்க உள்ள நிலையில் மூவர் குழுவினர் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்பு, குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மூவர் குழு தலைவர் குல்சன் ராஜ், அணையின் கசிவு நீர் இயல்பான நிலையிலேயே உள்ளதாகவும், 13 மதகுப்பகுதிகளும் நல்ல நிலையிலே உள்ளதாகவும் தெரிவித்தார். பேபி அணையை பலப்படுத்துவது குறித்து இருமாநில அரசுகளும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை