தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தந்தி டிவி
முல்லை பெரியாறு அணையில், மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். தமிழக பிரதிநிதிகள் பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகள் அம்மாநில நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அருண் கே.ஜேக்கப், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.60 அடியாக உள்ள நிலையில், பெரியாறு பிரதான மற்றும் பேபி அணை, கேலரி மற்றும் மதகுப் பகுதி, மழையின் அளவு, அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம், கசிவு நீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான அறிக்கை நாளை மூவர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்