முதுமலையில் எத்தனை புலிகள் உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய 29 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. புலிகளின் கால் தடம், எச்சம் ஆகியவற்றை நவீன கேமீராக்கள் மூலம் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி, தொடர்ந்து 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது.