தமிழ்நாடு

கடும் வறட்சியால் விலங்குகள் பரிதவிப்பு : தாகம் தீர்க்க நீர்தேடி அலையும் யானைகள்

முதுமலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும், தண்ணீரின்றி பரிதவிக்கின்றன.

தந்தி டிவி
321 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அடர்ந்த வனப் பகுதியான முதுமலையில் யானை, புலி, மான் உள்பட பல்வேறு விலங்குகளும் பறவைகளும் உள்ளன. போதிய பருவமழை இல்லாததால், வனப்பகுதி முழுவதும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. விலங்குகள் இரை, தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனப்பகுதியில் உள்ள நீர்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியை சுற்றி சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்