தமிழ்நாடு

குடும்ப தகராறால் 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்

ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ். இவரது மனைவி ராம்பிரியா. இவர்களுக்கு 2 வயதில் அனன்யா என்ற மகளும் ஒரு வயதில் தர்ஷனா என்ற குழந்தையும் இருந்தனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிரச்சினை அதிகமாகவே மனம் உடைந்த ராம்பிரியா, தனது 2 குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தனது மகள் மற்றும் பேத்திகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ராம்பிரியாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்