தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மகன்கள் - சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கும் தாய்...

ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ப்பு மகள் மீது ஆபிதா பேகம் என்பவர் கண்ணீர் மல்க புகார்.

தந்தி டிவி
சேலம் அடுத்த வீரகனூரை சேர்ந்த ஆபிதா பேகம் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகன்களுக்கு சிகிச்சை அளிக்க, தனது வீட்டை விற்க முடிவு செய்த நிலையில், அவரது வளர்ப்பு மகள் தடையாக உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். மகன்களுக்கு மருத்துவ செலவு செய்வதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால், ஆபிதா தனது 40 லட்சம் மதிப்பிலான வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில் வளர்ப்பு மகளான சமீனா வீட்டை விற்க கூடாது என்றும், தனது பெயரில் வீட்டை எழுதி வைக்க மிரட்டி வருவதாகவும் தெரிவித்த ஆபிதா, சமீனா மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மகன்களுடன் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு