கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ரயில் மோதி 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் இருந்து மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள், இலங்கியனூர் பகுதியில் விளைநிலங்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மழை காரணமாக நிலத்தில் தண்ணீர் தேங்கியதால், ஆடுகள் அருகிலிருந்த ரயில் தண்டவாளத்தில் சென்று படுத்திருந்தன.
அந்த நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை வழியாக மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில், தண்டவாளத்தில் இருந்த ஆடுகள் மீது மோதியதில் 70-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
சம்பவத்திற்குப் பிறகு ஆடு மேய்ப்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.